கணவர் தகாத உறவில் வைத்துக்கொண்ட பெண்ணின் தலைமுடியினை வெட்டிய மனைவி உட்பட 3 பேரினை போலீசார் கைதுசெய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் கோவையில் இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
கோவையினை சேர்ந்த ஒருவர் வெள்ளலூரினை சேர்ந்த ஆறுமுகம் என்பவரிடம் கூலி வேலைக்காக சென்ற நிலையில் ஆறுமுகத்தின் மனைவிக்கு சிவானந்தத்திற்குமிடையில் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது தகாத உறவாக மாறியுள்ளது.
- Advertisement -
இந்த விவகாரம் சிவானந்தத்தின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளிற்கு தெரிய வர தகாத உறவில் ஈடுபட்ட சுமதியையும், கணவனையும் கண்டித்ததுடன் காவல்நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளனர். அதையடுத்து காவல்துறையினர் இருவரினையும் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில், மீண்டும் சிவானந்தன் சுமதியின் வீட்டிற்கு சென்றதனை அறிந்த மனைவி மல்லிகா மற்றும் பிள்ளைகள் அங்கு சென்று சுமதியினை தாக்கி அவரது தலை முடியினை வெட்டியுள்ளனர்.
இது சம்பந்தமாக அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் மல்லிகா மற்றும் இரு பிள்ளைகளினையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறாக கணவன் தகாத உறவினை வைத்துக்கொண்ட பெண்ணின் தலைமுடியினை மனைவி மற்றும் பிள்ளைகள் வெட்டியமை அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது