நடிகர் விஜய் தனது பெற்றோர் சதய விழாவில், பங்கேற்காதது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, எஸ் ஏ சி காட்டமான பதில் ஒன்றை அளித்துள்ளார்.
- Advertisement -
நடிகர் விஜய், தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையடுத்து, லோகேஷ் இயக்கத்தில் தளபதி நடிக்க உள்ளார் என பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், தனது 80 ஆவது பிறந்த நாளை அண்மையில் கொண்டாடினார். இதற்கான சதய விழா, திருக்கடையூர் கோவிலில் நடைபெற்றது.
- Advertisement -
இந்த விழாவில் விஜய் பங்கேற்காதது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது, இதற்கு பதில் அளித்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் மட்டும் அங்கு வந்திருந்தால் ஒரு கூட்டம் கூடி இருக்கும். அப்போது, என் மனைவிக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணுக்கு தாலி கட்ட வேண்டிய நிலை வந்திருக்கும்.
இதுதான் அங்கு நடந்திருக்கும். விழாவுக்கு அவர் ஹைதராபாத்தில் இருக்கும் ஷூட்டிங்கை விட்டு விட்டு வர வேண்டுமா? இதெல்லாம் தேவையா?என காட்டமாக பதில் அளித்துள்ளார். இவரின் இந்த திடீர் பதிவு இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.