15 ஆவது பிரதமராக தினேஷ் குணவர்தன ஜனாதிபதி முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துகொண்டார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கபட்டதை தொடர்ந்து, புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை ஆகியன நியமிக்கபடவுள்ளன.

இதன்படி, புதிய அமைச்சரவை அமைச்சுகள் இன்று வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கபட்டுள்ளது. கொழும்பு ப்ளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இதற்கான நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இதேவேளை, நாட்டில் சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டுமென்றே பல்வேறு தரப்பினரால் கோரிக்கை முன்வைக்கபட்டுள்ளது. இந்த நிலையில், இன்று ஸ்தாபிக்கப்பட உள்ள அமைச்சரவை எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.