இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலின்றி ஜனாதிபதியாக வருவதற்கு பசில் ராஜபக்ஷவும் அவரது ஆதரவாளர்களும் திட்டமிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
தற்போதைய நெருக்கடி நிலை தீவிரமடையும் போது ஒரு கட்டத்தில் ஜனாதிபதிப் பதவியிலிருந்து கோத்தபாய ராஜபக்ஷ விலகுவார் என தாங்கள் நம்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பிரதமர் இப்போது மோசமான நிலையில் இருப்பதால் அந்த வாய்ப்புகள் உள்ளன.
- Advertisement -
பசில் ராஜபக்ஷ தேர்தலுக்குச் செல்லாமல் வேறு வழியில் ஜனாதிபதியாக வரத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.